Tuesday, July 27, 2010

அச்சமில்லை யச்சமில்லை

அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே, இச்சகத்து ளோரெல்லாம் எதிர்த்துநின்ற போதினும், அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே. துச்சமாக வெண்ணிநம்மைச் தூறுசெய்த போதினும், அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே. பிச்சைவாங்கி யுண்ணும்வாழ்க்கை பெற்றுவிட்ட போதினும், அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே. இச்சைகொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதினும், அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே

No comments:

Post a Comment